search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் உயிரிழப்பு"

    • சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
    • தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).

    இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

    இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    • வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே கிள்ளியூர் பகுதி வாறுவிளையை சேர்ந்தவர் ஜாண்றோஸ். இவரது மனைவி சாரதா (65).

    இவர் வீட்டில் வாத்துகள் வளர்த்து வருகிறார். சம்பவ தினம் சாரதா வாத்துகளின் தீவனத்துக்காக வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

    அங்கு இலைகளை வெட்டும் போது, வாழை மரத்தில் விஷ வண்டுகள் (கடந்தை) கூடு கட்டி யிருந்துள்ளது. இதை கவனிக்காமல் சாரதா இலை வெட்டிய போது, விஷ வண்டுகள் அவரை கொட்டியதில் படுகாய மடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குலசேக ரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாரதா உயிரிழந்தார். இது தொடர்பாக சாரதா மகன் ஜாண் ஜெயசிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.]

    • கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர்.
    • கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வெள்ளை குலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணய்யா (வயது46) விவசாயி. இவரது மனைவி கீதா (39). இவர்களது மகள் இந்துஜா(16). சரவணய்யா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கம் ஏ.ஏ.எம். நகரில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

    இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர்.
    • பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கோவையை சேர்ந்தவர் ஹரீஷ்குமார். இவருக்கு கடந்த வருடம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள நல்லபுள்ளியை சேர்ந்த அனிதா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அவர்களது ஊரான நல்லபுள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அனிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சித்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை சிகிச்சை பிரிவில் அனுமதித்து பிரசவம் பார்த்தனர். அப்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

    இதற்கிடையே பிரசவத்தின்போது, அனிதாவுக்கு அதிகளவில் ரத்தபோக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து டாக்டர்கள் அவரை திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர். பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே, அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே தாயும், சேயும் இறக்க காரணம் என குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சித்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாயும், சேயும் மரணம் அடைந்தது குறித்து அறிந்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கேரளாவில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோகுலப்பிரியா குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.
    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளிதிருப்பூர் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கோகுலப்பிரியா (25). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்துக்கான தேதியும் குறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.

    அப்போது அவர் தவறி அருகில் உள்ள கிணற்றில் கோகுலப்பிரியா விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி லியானார்.

    இதையடுத்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோகுலப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்படட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே நிர்மலா உயிரிழந்தார்.
    • திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருவெண்ணெய்நல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன். அவரது மனைவி நிர்மலா (வயது40) . இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வயல்வெளியில் உள்ள தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அந்த மாடுகளை வீட்டுக்கு காந்தலவாடி சாலை வழியாக ஓட்டி வந்தார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே நிர்மலா உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×